Monday, October 7, 2013

நேரடி மானிய திட்ட சர்ச்சைகள்



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

இந்திய நடுவண அரசு செயல்படுத்தும் நேரடி மானியதிட்டத்தின் மூலம் சமையல் காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் தருவதற்கு மாற்றாக, பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்பதற்கு தமிழக முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், 

இத்திட்டம் குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்:

இதுவரை அடிப்படைத் தேவையான பொருட்கள் சமூகத்தின் அடித்தளமக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் எட்டாக்கனியாகிவிடக்கூடாது என்பதற்காக சலுகைவிலையில் பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம், அரசு அலுவலகங்கள், அலுவலர்கள் மூலம் தரப்பட்டு வந்தது. 

நேரடி மானியதிட்டத்தின் நோக்கங்கள்;

  • பொது விநியோகத்திட்டத்தில் 58% பயனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை.
  • நிறைய ஓட்டைகள் உள்ளன.
  • அதீத ஊழல்கள் தழைத்தோங்க்கின்றன
  • செயல்படுத்தும் இடைத்தாரகர்களே பயன்பெறுகின்றனர்.
ஆகவே, பயனாளிகளை நேரடியாகச் சென்றடையவும், வேகமாகப் பயன் அடையவும் நேரடி மானியத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் பட்ஜெட்டில் 1,64,000மிச்சபடுத்தமுடியும், ஊழலை குறைக்க முடியும் என்பது மத்திய அரசு தருகின்ற விளக்கங்கள்.

எந்தெந்த திட்டங்களில் நேரடிமானியம் தரப்படவுள்ளன.

  • கல்விக்கான ஸ்காலர்ஷிப்
  • ஓய்வூதியம்
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிவாரணம்
  • கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்
  • சமையல்கேஸ், மண்ணென்ணெய்
  • உணவுப்பொருட்கள்
  • கல்விக்கான மானியம்
  • உரங்கள்
போன்ற 13வகை மத்திய அரசு திட்டங்கள் நேரடிமானியத்திட்டத்தின் வழி தருவதாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

எப்படி செயல்படுத்துவார்கள்?

National Payment Corporation of India என்ற அமைப்பின் மூலம் மத்திய அரசு ஆதார்அட்டை பெற்றுள்ளவர்களின் வங்கி கணக்கில் இப்பணம் நேரடியாக செலுத்தப்படும்.

வேறு எந்த நாடுகளில் இது போன்ற திட்டங்கள் உள்ளன?

தென்ஆப்பிரிக்கா, துருக்கி, சிலி, கொலம்பியா, ஈக்வாடர், ஜன்மைக்கா உள்ளிட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதை ஒத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்றவற்றில் ஒரு சில திட்டங்கள் பகுதியளவு நேரடிமானியமாக தரப்படுகின்றன.

இது வரை எந்த அளவு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜுவ் சுக்லா சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளபடி, 
"இதுவரை இந்தியாவில் சுமார் 40கோடிப் பேருக்கே ஆதார் எண் தரப்பட்டுள்ளது.
தரவேண்டியவர்களின் எண்ணிக்கை 80கோடிக்கும் அதிகம்.

16மாநிலங்களைச் சேர்ந்த 20மாவட்டங்களில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது அதில் சமையல் கேஸ்சிலிண்டருக்காக 90லட்சம் நபர்களின் வங்கி கணக்குகளில் ரூ480கோடி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 24க்குள் இந்தியாவில் மொத்தம் 289மாவட்டங்களில் செயல்படுத்தும் நிலையை எட்டுவோம். அதாவது 50% இந்தியாவில் செயல்படுத்திவிடுவோம். என்கிறார் ராஜீவ்சுக்லா

ஆய்வுகள் தரும் சில அதிர்ச்சி தகவல்கள்:

  • வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தை வேறு அவசர தேவைகளுக்கு பயன்படுத்தியதாக 70% மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
  • பெரும்பாலான பெண்கள் பணமாக தருவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்
  • ஆண்களில் 40% மேற்பட்டோர் பணம் வேறுவகையினங்களில் செலவழிவதாகக் கூறி நேரிடியமானியத்திற்கு பதிலாக பொதுவிநியோகமே தேவை என வலியுறுத்தி உள்ளனர்.
  • ஸ்காலர்ஷிப், ஓய்வூதியம், வேலையில்லாபட்டதாரிகளுக்கான நிவாரணம், கிராமப்புற வேலைவாய்புபதிட்டம் போன்றவைகளில் நேரடிமானியம் மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

நேரடி மானிய திட்டம் குறித்த அச்சங்கள்;

  • உரியநேரத்திற்கு, உரியவிலையில் பொருட்கள் பெறும் உரிமை மறுக்கப்படும் 
  • பொதுவிநியோகத்திட்டமுறை ஒழிக்கப்படும் ஆபத்துள்ளது.
  • பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழப்பர்.
  • மாநில அரசுகள் புறக்கணிக்கப்படுதல்
  • மத்திய அரசு - அதாவது தேசியகட்சிகள் - மக்களிடையே ஓட்டு அறுவடை செய்யும் தந்திரம்!
  • காலப்போக்கில் மானியங்களை படிப்படியாகக் குறைத்து, அறவே ஒழித்துக் கட்டுவது
  • ஆதார் அட்டையை அனைவருக்கும் தருவதற்கே பல ஆண்டுகள் ஆகும்....
  • ஆதார் அட்டைக்கு தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது விபரீதத்திற்கு வழிவகுக்கும்.
இறுதியாக மானியங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதும் நேரடி மானியதிட்ட செயலாக்கத்தைகேள்விகுள்ளாகியுள்ளது.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
01.10.2013

No comments: