-சாவித்திரிகண்ணன்
இந்திய மக்கள் உரிமைக்கழகம் என்ற PUCL
அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலவழக்கில் உச்சநீதிமறம்ம் ஒரு வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக
வலியுறுத்தப்பட்டுவந்த '49'ஓவிற்கு விடிவுகாலம்.
அதன் முக்கிய
அம்சங்கள்;
- ஓட்டுபோட்டு வாக்காளர்கள் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமை போன்றதே 'எந்த வேட்பாளரும் சரியில்லை' என பதிவு செய்யும் உரிமையும்!
- அரசியல் சட்டம் இந்திய குடிமக்களுக்கு ஆர்டிகல் 19 (1)ல் கூறியுள்ளடியான பேச்சுரிமையையும், தன் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் 49(0)வைப் அமல்படுத்துவதன் மூலம் உறுதிபடுத்துகிறோம்.
- .தற்போதும் கூட அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தனிபடிவத்தை கேட்டுவாங்கி நிரப்பித்தரவேண்டும். இதன்மூலம் வாக்காளரின் ரகசியத்தை காப்பாற்றத் தவறுகிறோம். ஆகவே, 'Voting Machine' லேயே' யாருக்கும் ஓட்டுப்போடவிருப்பமில்லை என்ற 'பட்டன் வைக்கப்படவேண்டும்.
- அரசியல் கட்சிகள் குற்றமற்ற நல்ல வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்ற உந்துதல் பெறுவதற்கு இந்த எதிர்மறை ஓட்டுகள் வழிவகுத்து அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
- தவறான நபர்களை, குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் இருந்து மக்கள் விலக்கி வைக்க துணைபுரியும்.
- நமது அரசியல் களம் தூய்மைபெறவும், ஜனநாயகம் உயிர்ப்புடன் விளங்கவும் இந்த எதிர்மறை வாக்குகள் வழிவகுக்கும்.
- அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில், கிரிஸ், உக்ரைன், சிலி, பங்காளதேஷ், நேவிடா, பின்லாந்து, கொலம்பியா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய 13நாடுகளில் ஏற்கெனவே இம்முறை வழக்கில் உள்ளது.
- தேர்தல் கமிஷன் இதனை உடனே நடைமுறைபடுத்தவேண்டும். இதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கவேண்டும்.
இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய குறைபாடு;
- ஜெயிக்க கூடிய வேட்பாளர் பெற்றுள்ளதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் எதிர்மறை ஒட்டுகள் விழுந்திருந்தால் என்ன நிலைபாட்டை மேற்கொள்வது என்பதை உச்சநீதிமன்றம தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை.
- அப்படி எதிர்மறை ஓட்டுகள் அதிகமாக சில தொகுதிகளில் விழுந்திருப்பின் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில், ஆட்சி அமைப்பதில் ஏற்படும் சிக்கல்களை, இழுபறிகளை எப்படி எதிர்கொள்வது?
- இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? நமது நாட்டில் சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்ற வகையில் மத்திய அரசும், அரசியல்கட்சிகளும் இத்தீர்ப்பு குறித்து எடுக்கப்போகும் முடிவுகள் என்னவாக இருக்கும்? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்த தீர்ப்பை பா.ஜ.கவின் பிரதமர்
வேட்பாளர் நரேந்திரமோடி, "முழுமனதோடு வரவேற்கிறேன்" என இணையதளத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
இது எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்,
ஜனநாயகம், அர்தத்தோடும் உயிர்ப்போடும் விளங்குவதற்கு இந்த தீர்ப்பு ஒரு அருமையான
சிறந்த படிநிலையாகும். இதனை நான் நீண்டகாலமாக வலியுறுத்திவந்தேன். இது வரை நாம்
வாக்களர்களுக்கு வழங்கியது பாதி உரிமையே, இனிவழங்க உள்ளதே முழுஉரிமை" என மோடி
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரான சோம்நாத்
சட்டர்ஜியோ,
"இது நடைமுறை சாத்தியமற்றது...
இதில் சிக்கல்களும்,
குழப்பங்களுமே மிஞ்சும்...
என் கருத்துப்படி உச்சநீதிமன்றத்திற்கு இப்படி சொல்ல
உரிமை இல்லை. இருந்தால் தெளிவுபடுத்தட்டும்" எனக்
கூறியுள்ளார்.
'வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை 'Voting machine' லேயே
வைக்க வேண்டும்' என நூற்றுக்கணக்கான பொதுநல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்
நீண்டகாலமாக கோரிக்கை வைத்து பாராடிவந்தனர். இந்நிலையில் இத்தீர்ப்பு அமலாகுமா?
என்பது பாராளுமன்றத்தில் இனி ஏற்படவிருக்கும் விவாவத்தின் போதே
தெளிவாகும்.
தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
No comments:
Post a Comment