Monday, October 22, 2007

காசில்லாமல் கடவுளைப் பார்ககமுடியாது

சாவித்திரிகண்ணன்
1799-ல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயரால் அரசாங்க கெஜட்டில் இந்துமதம் என்று பதிவாவதற்கு முன்பு இந்தியாவில் இந்துமதம் என்ற சொற்றொடரே கிடையாது. பற்பல தெய்வங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள் கொண்டிருந்த பாரத தேசத்தின் இதனை மதமாக குறிப்பிட விருமபாமல் 'சநாதனதர்மம்' என்றே பொதுவாக பெயரிடடனர். ஒவ்வொரு அரசர்களும், செல்வந்தர்களும் பிரம்மாண்டமாக கோவில்களை, கட்டியதற்கான காரணம் மக்களுக்கு ஏதோ ஒரு தெய்வநம்பிக்கை இருந்தால் ஒழுக்க நெறிசார்ந்துவாழ்வார்கள் என்பதாகும். அந்த கோயில்களுக்கு மக்களை வரவழைக்கும் விதமாகவே அரிய சிற்பங்களை அங்கு வடித்தனர். பற்பல கலைநிகழ்ச்சிகளை கோயில்களில் அரங்கேற்றினர். பசித்தோர் வந்துண்ணும் அன்னசாலையாகவும் ஆலயங்கள் விளங்கின. ஆனால் சமீபத்தில் கோயில்கள் வியாபார ஸ்தலங்களாக விஸ்வரூபமெடுத்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில முக்கிய கோயில்களை நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இழுத்து, மூடி பணம்கொடுத்தால் கோவிலுக்குள் விடுகின்றனர். வசதியற்றவர்கள் கோவில் பிரகாரத்திற்கு கூட வரவழியின்றி வாசலிலே தவம் கிடக்கின்றனர். கோயில்களின் வருமானத்தை பெருக்க சிறப்பு நுழைவுக்கடடணம் என்ற நடைமுறை ஏற்கெனவே உளளது. பொதுவழியில் பொதுமக்கள் நுழைவதற்கு சென்னையில் உளள கபாலீஸ்வரர், பார்ததசாரதி கோயில்களிலே கூட தடைசெய்தது இல்லை. ஆனால் புராதன கோயில்நகரமான காஞ்சியில் இப்படிப்பட்ட போக்குகள் இருப்பது பக்தர்களுக்கு வேதனை ஏற்படுததுவதாக உளளது. இது தொடர்பாக நியாயம் கேட்கும் பொதுமக்களை நிர்வாக அதிகாரிகளும், பணியாளர்களும் அலட்சியப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது. புண்ணியஸ்தலங்களான கோயில்கள் பணம்பறிக்கும் பாவஸ்தலங்களாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டதா? 'கோயில்கள்வேண்டாம் என்று கூறவில்லை கோயில்களின் கொள்ளை அடிப்பவர்களின் கூடாரங்களாகிவிடக்கீடாது என்றே சொல்கிறோம் என பராசக்தியில் வசனம் எழுதிய கலைஞர் ஆட்சியின் அறநிலையத்துறை ஆவண செய்யுமா?

No comments: