Wednesday, November 6, 2013

சினிமாவை தடை செய்யும் அதிகாரம் யாருக்கு?


                                                                                                              -சாவித்திரிகண்ணன்

சினிமாவை தடை செய்யக்கோரும் கோரிக்கைகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் அவ்வப்போது பலதரப்பிலிருந்து எழுவதையடுத்து இந்த பிரச்சினையை கையாளும் வழிமுறைகளைக் கண்டறிய மத்திய அரசு நீதிபதி. முகுல்முத்தல் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துறைகளை தற்போது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஸ்திவாரி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திரைபடங்கள் தடை தொடர்பான விவகாரங்களுக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது.

சினிமாவிற்கு தடைகள் ஒரு வரலாற்று பார்வை;

ஃ 1959ல் வெளியான நீல அக்சீர் நீக்சே என்ற படம் தான் முதன் மதல் இந்தியாவில் பிரச்சினைகளை சந்தித்த படம். இப்படம் 1930களில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கூலிதொழிலாளிகள் பற்றியது.
இருமாக தடைக்குப் பின் திரைக்கு வந்தது.

ஃ 1975ல் வெளியான 'ஆனந்தி' என்ற திரைபடம் இந்திராகாந்தியின் அவசரநிலை சட்டத்தால் தடுக்கப்பட்டது. ஆனால் ஜனதா அரசாங்கம் பதவிநேற்றவுடன் 1977ல் திரையிடப்பட்டது.

ஃ 1987ல் தமிழில் வெளியான 'ஒரு கிராமத்திலே' இட ஒதுக்கீடு பிரச்சினையை அலட்சிதால் எதிர்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத் தலையீட்டால் திரையிடப்பட்டது.

ஃ 2005ல் 'வாட்டர்' என்ற பட்ம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே மத நம்பிக்கையாளர்களால் தடை செய்யப்பட்டது. எனினும் அப்படம் இந்தியாவிற்கு வெளியில் படமாக்கப்பட்டு எதிர்பார்ப்புகளுக்கிடையே 2007ல் வெளியானது.

ஃ 2006ல் 'டாவின்சிகோட்' படம் சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டால் தடை தகர்க்கப்பட்டு வெளியானது.

ஃ 2011ல் 'முல்லைபெரியாறு டேம்' என்ற படம் தமிழக அரசால் தடுக்கப்பட்டது.

ஃ 2013ல் விஸ்வரூபம் படம் இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு காலதாமதமாக வெளியானது.

ஃ 2013ல் மெட்ராஸ்கபே படம் தமிழ் தேசிய மற்றமு ஈழ ஆதரவு இயக்கங்களால் எதிர்கப்பட்தால் தமிழகத்தில் திரையிடமுடியவில்லை.

ஃ 2013ல் 'துப்பாக்கி' படம் ஆளும் அரசின் அதிருப்தி காரணமாக எந்த தியேட்டரிலும் சிறிது காலம் திரையிடமுடியாமல் சிரமப்பட்டது.

எனவே, அதிகரித்து வரும் திரைப்பட தடை சர்ச்சைக்குரிய சூழலில் நீதிபதி முகுலமுத்தல் கமிட்டியின் பரிந்துரைகபள் முக்கியத்துவம் பெறுகின்றன; 

நீதிபதி முகுல்முத்தல் கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சங்கள்; 

ஃ சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பது மாநில அரசின் தனிப்பட்ட ஒன்றாகும். அதே சமயம் ஒரு படம் சென்சாரில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு அதை திரையிட அனுமதிக்க வேண்டும். இதில் ஆட்சேபணைகள் இருந்தால் அது Film certification Appellate Tribunel வழியாகத் தான் தீர்வுகாண வேண்டும்.

ஃ தனிநபரோ, இயக்கங்களோ, மாநில அரசோ ஒரு படம் குறித்து ஆட்சேபணை இருக்குமானால் அதற்கான தீர்வை விரைந்து பெறக்கூடிய இடம் Film certification Appellate Tribunel மட்டுமே!

ஃ மிகவும் பதட்டம் ஏற்படக்கூடிய சூழல்கள் இருக்குமானால் இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு இதில் எந்த அளவுக்கு சினிமாட்டோகிராப் சட்டம் செல்லுபடியாகும் என முடிவு எடுக்கவேண்டும்.

ஃ FCAT வலுப்படுத்தப்படவவேண்டும். 'சினிமாட்டோகிராப்' சட்டமே நிரந்தரமானதாக கருதவேண்டும்.

ஃ சென்சார்போர்டில் அரசியல்வாதிகளின் நியமனம் கூடாது. அழகுணர்வும், அறம்சார்ந்த பார்வையுமுள்ளோரையே நியமிக்கவேண்டும்.

ஃ வீடியோ, ஆடியோ, போஸ்டர்கள் போன்றவற்றாலும் சர்ச்சைகள் வருவதால் சினிமாவோடு இணைத்து இதற்கும் சான்றிதழ்கள் பெறவேண்டும்.


மேற்படி பரிந்துரைகள் படைப்பாளிகளின் கலை சுதந்திரற்கு பெரும் மதிப்பு தருவதாக உள்ளன. அரசியல், மதம், சாதி, இனுணர்வு போன்றவற்றால் கலை படைப்புகள் தடை செய்யபடுவதற்கு ஒரு தீர்வு தருவதாக உள்ளன. எனினும், படைப்பாளிகள் தங்கள் படைப்பின் எதிர்வினைகள் குறித்த சமூக பொறுப்புணர்வுடன் செயலாற்றவேண்டும். 



தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
10.10.2013

No comments: