Friday, September 7, 2012

வங்கித்துறை வேலை நிறுத்தம்

-சாவித்திரிகண்ணன்
 
நாடெங்கும் வங்கித்துறை வேலை நிறுத்ததால் பொருளாதாரச் செயல்பாடுகள் கடுமையான பாதிப்படைந்துள்ளன!
வங்கிகள் என்பவை பொருளாதாரச் செயல்பாடுகளை இணைக்கும் சங்கிலி பிணைப்புகள் போன்றவை! வேலை நிறுத்தத்தின் இரண்டு தினங்கள் வியாபார நிறுவனங்களும், மக்களும் சந்திக்கும் இடர்பாடுகள், இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஆகவே பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும் இந்த வேலைநிறுத்த இடர்பாடுகள், இழப்புகளை வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் நிர்பந்திருப்பதற்கு மாற்றாக மக்களிடம் இந்த பிரச்சினைகள் குறித்த விவாதத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.
 
'மக்களுக்காகவே வேலைநிறுத்தம்' என வங்கி ஊழியர்கள் சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் எதற்காக 'ஸ்டிரைக்' செயிகிறார்கள் என்பதே தெரியவில்லை மக்களுக்கு!
 
இந்தியாவில் 1969ல் அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. அதன்பிறகு வங்கிகளால் மக்களும், மக்களால் வங்கியும் கண்ட வளர்ச்சிகள் பிரமிக்கத்தக்கவை.
 
இன்று இந்தியாவில் 24 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சுமார் 87,000கிளைகளுடனும், 10லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் செய்லபடுகின்றன. இவற்றில் மக்கள் பணம் சுமார் 60லட்சம் கோடி வைப்பு நிதியாக உள்ளது. மொத்த வங்கி செயல்பாடுகளில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 75சதவிகிதம். இவையெல்லாம் பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் புள்ளி விபரங்கள்.
 
இந்நிலையில் வங்கித்துறையில் சில சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த கந்தேல்வால் கமிட்டி 105 பரிந்துறைகளை வழங்கியுள்ளது. அந்து பரிந்துரைகள் பலவற்றை எதிர்த்தே தற்போது வேலை நிறுத்தம் நடக்கிறது.
  •  பொதுத்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது,
  •  வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கோலோச்சும் வாய்ப்புகளை அதிகரிப்பது,
  • பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து வங்கிகளின் எண்ணிக்கையையும், கிளைகளையும் கணிசமாகக் குறைப்பது,
  • வங்கிப் பணிகள் சிலவற்றை Out sourcing மூலமாக வெளியே கொடுப்பது,
போன்ற பரிந்துரைகளே இன்றைய சர்ச்சைகளுக்கு காரணமாகும்!
 
வெளிநாட்டு வங்கிகள் குறிப்பாக இன்றைக்கு அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் தங்கள் தவறான செயல்பாடுகளால் திவாலாகி வருகின்றன. இந்நிலையில் வங்கித்துறையில் அந்நிய வங்கிகள் ஆரோக்கியமானவை தானா? என்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். அதோடு மூலதனத்தை அதிகரிக்கவே தனியார் ஆதிக்கத்தை வங்கிகளுக்குள் அனுமதிக்கிறோம் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. தற்போது பொதுத்துறை வங்கிகளின் வைப்புத்தொகையான 60லட்சம் கோடி மக்களால் தரப்பட்டவையே அன்றி தனியார்களால் அல்ல. மேலும் இன்று இந்தியாவில் இயங்கும் 12 தனியார் வங்கிகளின் மொத்த மூலதனமே 4,569 கோடிதான்! ஆனால் மக்களிடமிருந்து அவர்கள் பெற்றதோ 8,22,801 கோடிகள்! ஆக, அரசு வங்கிகளுக்கு அள்ளி கொடுத்து நம்பிக்கை வைக்க மக்கள் இருக்கும் போது அந்த நம்பிக்கைக்கு பாதகம் விளைவிப்பதா? என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.
 
தேசியவங்கிகளை இணைப்பது, கிளைகளை குறைப்பது என்பது தற்போதைய பரந்துபட்ட சேவையை முடக்கும் செயல் - இதை அனைத்து மக்களும் கண்டிப்பாக எதிப்பர் மூடப்படும் வங்கிகளின் இடத்தை தனியார் கந்து வட்டிபேர்வழிகள் ஆக்கிரமிக்கும் ஆபத்துகளும் உள்ளன!
 
'அதே சமயம் தனியார் வங்கிகளே கூடாது' என்பது ஏற்புடையதல்ல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசியல் தலையீடுகள் அறவே தவிர்க்கப்படவேண்டும். வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் மக்களை அலட்சியப்படுத்துவது கால்கடுக்க காத்திருக்க வைப்பது, அலைகழிப்பது போன்ற அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை என்பது கவலையளிக்கிறது.
 
இந்நிலையில் 'Out sourcing' தவறாகத் தெரியவில்லை. அவட்சோர்சிங்கை எதிர்ப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது. ஏனெனில் அது குறைந்த செலவில் அதிக பலன்களை வாடிக்கையாளர்கள் பலன்கள் பெற உதவும்.
 
மொத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை பலஹீனப்படுத்துவதை, மத்திய அரசு கைவிடவேண்டும். மாறாக அதை பலப்படுத்தும் சீர்திருத்தங்களை தயங்காமல் அமல்படுத்தலாம்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: